நவகைலாய தலத்தில் எட்டாவது தலமான, குரும்பூர் அருகே உள்ள ராஜபதி ஸ்ரீகைலாசநாதர் கோயிலில் ரூ.1.5 கோடி செலவில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் அமைப்பதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது .
இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சுவாமி, அம்பாளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ஸ்ரீவிநாயகர் பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் 10.15-க்கு ராஜகோபுர திருப்பணி வாஸ்து கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில், கோவில்பட்டி கைலாஷ் அறக்கட்டளை மற்றும் இத் திருக்கோயில் தலைவருமான குரு. பாலசுப்பிரமணியன், ஆறுமுகனேரி உப்புத் தொழிலாளர் சங்கத் தலைவர் எஸ். லட்சுமணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.