தூத்துக்குடி புதுக்கிராமத்தில் உள்ள ஹோலிகிராஸ் ஹோம் சயின்ஸ் கல்லூரியில் தேசிய தர மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தேசிய அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டு மன்றத்தின் (NAAC) குழுவினர், இக் கல்லூரியில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இக் குழுவில் பஞ்சாப் குருநானக் பல்கலைக்கழக பேராசிரியர் சசின்ந்தர் சிங், பெங்களூரு பேராசிரியர் ஏ. சிவலிங்கம், மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த கல்லூரி முதல்வர் சவிதா சிவராயசேட் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இக்குழுவினர் கல்லூரியில் ஒவ்வொரு துறையையும் ஆய்வு செய்தனர். ஆய்வு அறிக்கையை கல்லூரி முதல்வர் மேரி கில்டாவிடம் அவர்கள் வழங்கினர். ஆய்வின்போது, கல்லூரியின் குழு ஒருங்கிணைப்பாளர்கள் சு. வகிதா, சத்தியலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.