தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சார்பில், முத்தம்மாள் காலனியில் சமூக நல்லிணக்க முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் உதவி ஆய்வாளர் க. முருகன் தலைமை வகித்தார். முத்தம்மாள் காலனி குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் சி. தங்கராஜ் முகாமில் கலந்துகொண்டு சாதி, சமய வேறுபாடுகள் களைந்து மக்கள் அனைவரும் சமூக நல்லிணக்கத்தோடு, ஒற்றுமையோடும் வாழ வேண்டும் என வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், முத்தம்மாள் காலனி பொதுநலச் சங்க கெளரவ ஆலோசகர் பி. மாடசாமி, துணைச் செயலர் டேவிட்சன், செயற்குழு உறுப்பினர் கே. ராஜேந்திரன், ரஹ்மத்நகர் குடியிருப்போர் பொதுநலச் சங்கத் தலைவர் முகமது உசைன், சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு புள்ளியியல் ஆய்வாளர் டல்லஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.