கயத்தாறு அருகே அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
கயத்தாறு காவல் நிலைய உதவி ஆய்வாளர் மணி தலைமையில் போலீஸார் சனிக்கிழமை ரோந்து பணியில் சென்றபோது, தெற்கு மயிலோடை பேருந்து நிறுத்தம் பின்புறம் பகுதியில் சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணை பிடித்து சோதனையிட்ட போது அவரிடம் 20 மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அவர், அதே பகுதி பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்த மாடசாமி மனைவி இசக்கியம்மாள் (35) என்பதும், அவர் அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.