உலக கழிவறை தினத்தையொட்டி, ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் சார்பில் தூத்துக்குடியில் பேரணி நடைபெற்றது.
இந்நிறுவனம் சார்பில், தூத்துக்குடி மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் உடல்நலம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வடக்கு சிலுக்கன்பட்டி, மீளாவிட்டன், டி.வி. புரம், ஏ. குமாரரெட்டியார்புரம், டி. குமரகிரி ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரம் மூலமாக பிரசாரம் மற்றும் பேரணி நடைபெற்றது. பேரணியை மீளவிட்டான் கூட்டுறவு வங்கிச் செயலர் சுதாகர் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின்போது, அடிப்படை சுகாதாரம் பேணப்படாவிட்டால் அது மக்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை அறியப்படுத்துவது மற்றும் பாதுகாப்புடன் மேலாண்மை செய்யப்பட்ட சுகாதாரத்தை பேண ஊரக மக்களை ஊக்கப்படுத்துவது ஆகியன குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.