கோவில்பட்டி காந்தி மண்டபத்தில் தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு சங்கத் தலைவர் அய்யலுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், சங்கச் செயலர் கேசவன் கூட்டறிக்கையையும், பொருளாளர் ராசையா வரவு, செலவு அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சங்க உறுப்பினர் ஆசிரியர் நம்பி மறைவுக்கு 2 நிமிடம் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து, சங்க உறுப்பினர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. கூட்டத்தில், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்றது. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் ஒருநாள் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. சங்க உறுப்பினர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.