விளாத்திகுளம் அருகே லட்சுமிநாராயணபுரத்தில் குடும்ப தகராறு காரணமாக இளம்பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
விளாத்திகுளம் அருகே லட்சுமிநாராயணபுரத்தை சேர்ந்தவர் ராமராஜன் (35). இவரது மனைவி கிருஷ்ணகுமாரி (30). இவர்களுக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக தம்பதிக்கிடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் ஞாயிற்றுகிழமை இருவருக்குமிடையே மீண்டும் பிரச்னை ஏற்படவே மனமுடைந்த கிருஷ்ணகுமாரி வீட்டின் உள் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து விளாத்திகுளம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.