சுதந்திர தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழகத்தில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் முக்கிய பகுதிகள் மற்றும் ஆலயங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை மாலை முதல் திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களை திருக்கோயில் காவல் உதவி ஆய்வாளர் மீனா தலைமையிலான காவல் துறையினர் மெட்டல் டிடெக்டர் கருவி மூலம் சோதனை செய்து பின்னர் கோயிலுக்குள் தரிசனம் செய்ய அனுமதித்தனர்.