இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கல்

ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
வட்டாட்சியர் சந்திரன் தலைமை வகித்தார். மண்டலத் துணை வட்டாட்சியர் சுந்தரராகவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் திருப்பாற்கடல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் சங்கரவடிவு வரவேற்றார்.
தேர்வு செய்யப்பட்டிருந்த 80 பயனாளிகளுக்கு எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ. இலவச வீட்டுமனைப் பட்டாக்களை வழங்கிப் பேசினார். இதில், வருவாய் ஆய்வாளர்கள் செய்துங்கநல்லூர் அய்யனார், ஸ்ரீவைகுண்டம் பாண்டியராஜன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் ஸ்ரீவைகுண்டம் ஆறுமுகநயினார், ஆழ்வார்திருநகரி ராஜ்நாராயணன், மாவட்ட இளைஞர்-இளம்பெண்கள் பாசறை இணைச் செயலர் காசிராஜன், நகரச் செயலர் காசிராஜன், முன்னாள் தொகுதி இணைச் செயலர் ராஜப்பாவெங்கடாச்சாரி உள்பட பலர் கலந்துகொண்டனர். கிராம நிர்வாக அலுவலர் சக்திவேல் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com