நெல்லை இளைஞர் கொலை வழக்கு: தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருவர் சரண்

திருநெல்வேலி அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர்

திருநெல்வேலி அருகே தலை துண்டித்து இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இருவர் தூத்துக்குடி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
 திருநெல்வேலி பாளையங்கோட்டை அருகேயுள்ள ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்து மகன் பால்துரை (19).  இவர் கடந்த 18 ஆம் தேதி பாலாமடையில் தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.  அவரது தலை அங்குள்ள கலையரங்கிலும் உடல் தாமிரவருணி ஆற்றிலும் மீட்கப்பட்டது. 
இதுதொடர்பாக சீவலப்பேரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த மகாதேவனை கைது செய்தனர். 
இந்நிலையில், இக்கொலை வழக்கு தொடர்பாக ராஜவல்லிபுரத்தை சேர்ந்த அருண்குமார் (27),  மதிபாலன் (24) ஆகியோர் தூத்துக்குடி 3 ஆவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் நீதிபதி தமிழ்ச்செல்வி முன்பு செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர். பின்னர், இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com