கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் மணிமண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு அறக்கட்டளை கோரிக்கை விடுத்துள்ளது.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 219ஆவது நினைவு நாளை முன்னிட்டு, கட்டபொம்மன் சிலைக்கு அறக்கட்டளை நிறுவனர் கே.எஸ்.குட்டி தலைமையில் அந்த அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், அறக்கட்டளை சார்பில் வீரசக்கதேவி ஆலயத்தில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர்.
இவ்வமைப்பினர், மணிமண்டபம் அருகே பேருந்து நிறுத்தம் அமைக்க வேண்டும் என்றும், கட்டபொம்மன் நினைவு நாளை அரசு விழாவாக நடத்த வேண்டும். மணிமண்டபம் மற்றும் கட்டபொம்மன் நினைவிடத்தில் குடிநீர் வசதி ஏற்படுத்தித்தர வேண்டும். மாலை நேரங்களில் காவலர்களை பணி நியமித்து கண்காணிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் மனு அளித்தனர்.