நாகலாபுரத்தில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக மாதிரி அரசு கலை அறிவியல் கல்லூரியில் ஆசிரியர் தின கருத்தரங்கம் நடைபெற்றது.
கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் ஜெயசிங் தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் சுரேஷ்பாண்டி முன்னிலை வகித்தார். மாணவி ரம்யா வரவேற்றார். "இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு நிலை' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில், மாணவ- மாணவியர், ஆசிரியர்கள் பங்கேற்று உரையாற்றினர்.
நிகழ்ச்சியில் இளையோர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர் செண்பகராஜ், பேராசிரியர்கள் சரவணகுமார், ஆல்ட்ரின், மகேஷ்வரன் மற்றும் மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர். மாணவி கெளசல்யா நன்றி கூறினார்.