ஆறுமுகனேரியில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடத்துவது தொடர்பாக காவல் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் ஆய்வாளர் கணேஷ்குமார் தலைமை வகித்தார். உதவி ஆய்வாளர் மாடசாமி வரவேற்றார். இந்து மற்றும் முஸ்லிலிம் அமைப்பு நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். ஊர்வலத்தின்போது கடைப்பிடிக்கவேண்டிய விதிமுறைகள் குறித்து கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது.