திருச்செந்தூர் காஞ்சி ஸ்ரீ சங்கரா பள்ளி மாணவர்கள் தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வெற்றி பெற்றனர்.
காயல்பட்டினம் எல்.கே. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இப்போட்டியில், இப் பள்ளி மாணவி எம்.ஸ்கைலா 14 வயதுக்குள்பட்ட பிரிவில், நீளம் தாண்டுதல் மற்றும் 4*100மீ தொடர் ஓட்டத்தில் முதலிடம் பெற்றதோடு, தனி நபர் சாம்பியன் பட்டத்தையும் வென்றார். 14 வயதுக்குள்பட்ட மாணவர்களுக்கான பிரிவில் ஆரோக்கிய பிரிஷால், 80 மீ. தடை தாண்டும் போட்டியில் முதலிடமும், மிதுன்இசக்கி இரண்டாமிடமும் பெற்றனர். மதன் வெங்கடேஷ் வட்டு எறிதல் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளில் முதலிடம் பெற்று, தனிநபர் சாம்பியன் பட்டத்தையும் பெற்றார்.
17 வயதுக்குள்பட்ட பிரிவில், வட்டு எறிதலில் சரண்குமார் மூன்றாமிடமும், 19 வயதுக்குள்பட்ட பிரிவில் பிரகாஷ் வட்டு எறிதலில் முதலிடமும், பாலஹரிஷ் 800 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடமும், அஜய் கிருஷ்ணன் 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் முதலிடமும், மும்முறை தாண்டும் போட்டியில் இரண்டாமிடமும், 4*100 மீ ஓட்டப் போட்டியில் அஜய் கிருஷ்ணன், சரோனிஷ், ஆரோக்கியரிஜோ மற்றும் பால ஹரிஷ் ஆகியோர் முதலிடமும் பெற்று தூத்துக்குடி கல்வி மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் ஒட்டு மொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளித் தாளாளர் அ.ராமமூர்த்தி, முதல்வர் இரா.செல்வவைஷ்ணவி, போக்குவரத்து மேலாளர் கிஷோர்பாபு உள்ளிட்டோர் பாராட்டினர்.