ஆறுமுகனேரி பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா

ஆறுமுகனேரி  அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

ஆறுமுகனேரி  அருள்மிகு பத்திரகாளி அம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வருஷாபிஷேகம்,  இரவில் திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன. நள்ளிரவில் அம்மனுக்கு சந்தனக்காப்பு அலங்காரம்,  தீபாராதனை நடைபெற்றது. 2ஆம் நாளான திங்கள்கிழமை இரவு சிறப்பு பூஜை, நள்ளிரவு மாக்காப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. 3ஆம் நாளான செவ்வாய்க்கிழமை பகலில் உச்சிகால பூஜை, அன்னதானம், இரவு முளைப்பாரி ஊர்வலம்,  நள்ளிரவு அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. புதன்கிழமை காலையில் தீர்த்தவாரி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் கே.கிழக்கித்துமுத்து, ஏ.ஆதிசேஷன், பி.பார்வதிகுமார், கே.மூக்காண்டி, இ.அமிர்தராஜ், ஆர்ய விஜயன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com