சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் இலவச மாதிரி தேர்வு
சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி சார்பில், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரத்தில் சனிக்கிழமை நடைபெற்ற குரூப்-4 தேர்வுக்கான மாதிரி தேர்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் குரூப்-4 பதவிக்கான எழுத்துத் தேர்வு, செப்டம்பர் 1 ஆம் தேதி தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது.
இந்தத் தேர்வுக்கு தயாராகி வருவோருக்கு திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரத்தில் உள்ள சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி மையங்களில் இலவச மாதிரி தேர்வு சனிக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி மையத்தில் நடைபெற்ற தேர்வின்போது, தேர்வை எதிர்கொள்வது, நேர மேலாண்மையை கடைப்பிடிப்பது குறித்து அகாதெமி நிறுவனர் து. சுகேஷ் சாமுவேல் விளக்கம் அளித்தார். இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு மாதிரி தேர்வு எழுதினர்.
தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள் சரிபார்க்கப்பட்டு மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரம் தேர்வு எழுதியவரின் செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் அனுப்பப்பட்டது.