தூத்துக்குடி
விளாத்திகுளம் அருகே சிறப்பு குறைதீர் முகாம்
விளாத்திகுளம் அருகே என். வேடபட்டி கிராமத்தில் முதல் அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது.
விளாத்திகுளம் அருகே என். வேடபட்டி கிராமத்தில் முதல் அமைச்சரின் சிறப்பு குறைதீர் திட்ட முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு விளாத்திகுளம் எம்.எல்.ஏ. பி. சின்னப்பன் தலைமை வகித்தார். எட்டயபுரம் வட்டாட்சியர் அழகர், புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் சாலை வசதி, பேருந்து வசதி, குடிநீர், சுகாதாரம், கிணறுகளை தூர்வாருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் எம்.எல்.ஏ.விடம் வழங்கினர்.
முகாமில், துணை வட்டாட்சியர் ஆரோக்கியசாமி, புதூர் ஊராட்சி ஒன்றிய முன்னாள் தலைவர் தனஞ்செயன், கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன், நம்பிபுரம் கூட்டுறவு சங்கத் தலைவர் தனவதி உள்பட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதேவி செய்திருந்தார்.