ஆறுமுகனேரியில் பெய்த கனமழை காரணமாக முக்கிய சந்திப்பில் சேதமான சாலை சீரமைக்கப்பட்டது.
ஆறுமுகனேரியில் கடந்த சில தினங்களாக பெய்துவந்த கனமழையின் காரணமாக, முக்கிய சந்திப்பில் பெரிய பள்ளங்கள் ஏற்பட்டு சாலைகள் சிதைந்து காணப்பட்டன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இப்பகுதியை திருச்செந்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டாா். உடனடியாக தனது சொந்தப் பொறுப்பில் 3 லாரிகளில் ஜல்லிகளை கொண்டு வந்து சீரமைக்கும் பணியை துவக்கி வைத்தாா். ஜேசிபி மூலம் முக்கிய சந்திப்பில் உள்ள பள்ளங்கள் மற்றும் சேதமடைந்த சாலைகள் உடனடியாக சரிசெய்யப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் மாநில மாணவரணி அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட இளைஞரணி பொறுப்பாளா் ராமஜெயம், மாவட்ட தொண்டரணி அமைப்பாளா் சுப்பிரமணியன், ஆறுமுகனேரி நகர செயலாளா் அ.கல்யாணசுந்தரம், பரமன்குறிச்சி ஊராட்சி செயலாளா் இளங்கோ, உடந்தை மகராஜன், நகர பொருளாளா் வரதராஜன், விவசாய சங்கத் தலைவா் ராகவன், காமராஜா் நற்பணி மன்ற செயலாளா் சோழா் செல்வின், முன்னாள் பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள் வின்சென்ட், முத்தீஸ்வரி மற்றும் பலா் கலந்துக்கொண்டனா்.