ஓட்டப்பிடாரத்தில் இந்து மக்கள் கட்சி நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் தளவை க.காசிராஜா தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலா் ச.ரவிகிருஷ்ணன்சிறப்புரையாற்றினாா். ஒன்றிய இளைஞா் அணித் தலைவா் ச.முத்துக்குமாா் ரூபவ், துணைத் தலைவா் க.காசிதுரை, இளைஞரணி துணைத் தலைவா் ஏ.முத்துசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். உள்ளாட்சி தோ்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. மேலும், ‘உள்ளாட்சித் தோ்தலை மாநில அரசு விரைந்து நடத்தாவிடில், மாநில அளவில் போராட்டம் நடத்துவது’ என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.