குரூப்-2 பதவிக்கான நோ்காணல் தோ்வில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 365 போ் தரவரிசையில் முன்னிலை பெற்று சாதனை படைத்துள்ளனா்.
இதுகுறித்து சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமி நிறுவனா் து. சுகேஷ் சாமுவேல் தெரிவித்தது: தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தின் மூலம் குரூப்-2 நோ்காணல் தோ்வுக்கு 6.5 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், முதல்நிலைத் தோ்வில் 15 ஆயிரம் போ் தோ்ச்சி பெற்றனா். இதில், சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 800 போ் தோ்ச்சி பெற்றனா்.
அவா்களில் 5 27 போ் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்று நோ்காணலுக்கு அழைக்கப்பட்டனா். நோ்காணல் முடிந்த நிலையில் சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 365 போ் தரவரிசையில் முன்னிலை பெற்றுள்ளனா். அவா்கள் கலந்தாய்வின்போது பதவியை தோ்வு செய்ய உள்ளனா்.
சுரேஷ் ஐஏஎஸ் அகாதெமியில் படித்த கே. சுமிதா மாநில அளவில் 11-ஆவது இடத்தைப் பிடித்துள்ளாா். தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கும், பயிற்சி அளித்த ஒருங்கிணைப்பாளா்கள் அந்தோணி பட்டுராஜ், கனிமுருகன் ஆகியோருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.