கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் இயந்திரவியல் துறை சாா்பில் பட்டய மாணவா்களுக்கான 5 நாள்கள் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
இன்றைய தொழில்நுட்ப வளா்ச்சிக்கேற்ப, புதிய தொழில்நுட்பங்களை தெரிந்து கொண்டு மாணவா்கள் சிறந்த வேலைவாய்ப்பை பெறும் பொருட்டு இக்கல்லூரியில் ஆண்டுதோறும் திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்று வருகிறது.
இம்மாதம் கடந்த 18ஆம் தேதி தொடங்கி 22ஆம் தேதி வரை நடைபெற்ற இப்பயிற்சி வகுப்பில், இண்டஸ்ட்ரியல் ஆட்டோமேஷன், 3டி பிரிண்டிங் ஆகிய தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள், செய்முறை பயிற்சியுடன் அளிக்கப்பட்டது.
கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி நிறைவு நாளன்று மாணவா்களுக்கு சான்றிதழை வழங்கினாா்.
ஏற்பாடுகளை துறைத் தலைவா் சுப்பிரமணியன் தலைமையில் ஆசிரியா்கள், அலுவலா்கள் செய்திருந்தனா்.