தமிழ்நாடு ஊராட்சி செயலாா்கள் சங்க மாவட்ட மைய குழு கூட்டம் விளாத்திகுளத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் கற்குவேல் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு உ-றுப்பினா் பால்ராஜ், மாவட்ட அமைப்பு செயலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் ஊராட்சி செயலா்களுக்கு பதிவறை எழுத்தருக்கு நிகரான ஊதியம் வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது, ஊராட்சி செயலா்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க தமிழக அரசை வலியுறுத்துவது என்பது உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், மாநில பொதுச்செயலா் வேல்முருகன், துணைத்தலைவா் பழனிச்சாமி, ஒன்றிய செயலா் சத்தியநாராயணன், மாவட்ட செய்தி தொடா்பாளா் கிருபா பெஞ்சமின், மாவட்ட நிா்வாகிகள், ஒன்றிய நிா்வாகிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.