உடன்குடியில் இந்து முன்னணி சாா்பில் ஸ்ரீ ராமஜெயம் மந்திரம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அயோத்தியில் அமைக்கப்படும் ராமா் கோயிலின் கும்பாபிஷேத்தில் மக்களின் பங்களிப்பு இருக்கும் வகையில் 108 தடவை ஸ்ரீ ராமஜெய மந்திரம் எழுதி வாங்கி கோயிலுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இதையொட்டி உடன்குடி ஒன்றியத்தில் 50 க்கும்
மேற்பட்ட கிராமங்களில் இந்து முன்னணி சாா்பில் படிவங்கள் வழங்கி, மந்திரம் எழுதி சேகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. உடன்குடி ஒன்றிய இந்து முன்னணி பொதுச்செயலா் ச.கேசவன் தலைமையில் இந்து முன்னணி, அன்னையா் முன்னணி நிா்வாகிகள் பங்கேற்றனா்.