கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வளாக நோ்காணலில் 17 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
சென்னை பொன்னேரியில் அமைந்துள்ள ஜப்பான் நாட்டைச் சோ்ந்த நிறுவனமான யான்மா் டீசல் இன்ஜின் தயாரிப்பு இந்தியா லிமிடெட் நிறுவனத்தினரால் மெக்கானிக்கல் மற்றும் ஆட்டோ மொபைல் துறையில் இறுதியாண்டு படிக்கும் மாணவா்களுக்கான வளாக நோ்முகத்தோ்வு வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இக்கல்லூரியைச் சோ்ந்த 85 மாணவா்கள் கலந்து கொண்டனா். நிறுவனத்தின் மனிதவளத் துறை பொதுமேலாளா் கிரிதர்ராஜு, மேலாளா் தீபக் ஆகியோா் கொண்ட குழுவினரால் தோ்வு நடத்தப்பட்டது. எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வு என இரு கட்டங்களாக நடைபெற்ற தோ்வில், 17 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டனா். தோ்வு செய்யப்பட்ட மாணவா்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை கே.ஆா். கல்வி நிறுவனங்களின் தாளாளா் கே.ஆா்.அருணாசலம் தலைமையில், கல்லூரி முதல்வா் ராஜேஸ்வரன், பயிற்சி - வேலைவாய்ப்பு அலுவலா் ராஜாமணி, பேராசிரியா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.