தூத்துக்குடி மாநகரில் பிப்ரவரி 21 மின்தடை

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்.21) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் காரணமாக வியாழக்கிழமை (பிப்.21) மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தூத்துக்குடி நகர மின் விநியோக செயற்பொறியாளர் செ. விஜயசங்கரபாண்டியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தூத்துக்குடி எட்டயபுரம் சாலையிலுள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வியாழக்கிழமை காலை 9 முதல் மாலை 3 மணி வரை தூத்துக்குடி போல்பேட்டை, ஆண்டாள் தெரு, சத்திரம் தெரு, 1ஆம் ரயில்வே கேட்,  2ஆம் ரயில்வே கேட், மட்டக்கடை, கடற்கரைச் சாலை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், தெப்பகுளம், சிவன்கோயில் தெரு, டபுள்யூ.ஜி.சி. சாலை, ஜார்ஜ் சாலை, வி.இ. சாலை, ஸ்டேட் பாங்க் காலனி, முத்துக்கிருஷ்ணாபுரம், முத்தம்மாள் காலனி, கே.டி.சி. நகர், சிவந்தாகுளம் பிரதான சாலை, தாமோதரநகர், குறிஞ்சிநகர், சிதம்பரநகர், பிரையன்ட் நகர், சுப்பையா முதலியார்புரம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com