தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக தா.கி. ராமச்சந்திரன் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஆணையராக இருந்த தா.கி. ராமச்சந்திரன், தூத்துக்குடி வஉசி துறைமுக பொறுப்புக் கழக தலைவராக அண்மையில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து, தூத்துக்குடி துறைமுக அலுவலகத்தில் சனிக்கிழமை அவர் பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள தா.கி. ராமச்சந்திரன் 1991ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பிரிவு (தமிழ்நாடு) அதிகாரியாக தேர்ச்சி பெற்றவர்.
ராமநாதபுரம் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தின் ஆட்சியராகவும், தமிழக நெடுஞ்சாலைத் துறை மற்றும் சிறுதுறைமுகங்களின் செயலராகவும், தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப துறையின் முக்கிய செயலராகவும், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் துறையின் நிர்வாக இயக்குநராகவும்,
தமிழ்நாடு பயிற்சி துறையின் பொது இயக்குநராகவும், ஆவின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.