பெருங்குளத்தில் நாளை செங்கோல் ஆதீன குருபூஜை விழா

திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர்

திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனம் 102ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் கல்யாணசுந்தர சத்யஞான தேசிக சுவாமிகள் குருபூஜை விழா புதன்கிழமை (ஜன.16) நடைபெறுகிறது.
பெருங்குளம் சித்தர் தபோவனத்தில் நடைபெறும் இவ்விழாவில் காலை  8 மணிக்கு திருமுறை விண்ணப்பம், காலை 9 மணிக்கு திருக்கைலாய பரம்பரை பெருங்குளம் செங்கோல் ஆதீனத்தின் 103ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் சிவப்பிரகாச சத்யஞான தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் திருவுளப் பாங்கின் வண்ணம் 102ஆவது குருமகா சன்னிதானம் சீர்வளர்சீர் கல்யாணசுந்தர சத்யஞான தேசிக சுவாமிகள் குருமூர்த்தத்திற்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். பகல் 11.30 மணிக்கு விருது வழங்கி சிறப்பித்தலும், மதியம் 12 மணிக்கு மாகேஸ்வர பூஜையும் நடைபெறும்.
குருபூஜை விழாவில் ஆன்மிக அன்பர்கள் கலந்து கொண்டு குருவருள் பெற்றுச் செல்லுமாறு ஆதீனத்தைச் சேர்ந்த அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com