ஆறுமுகனேரி சைவ சித்தாந்த சங்கத்தில் மார்கழி மாத பஜனை நிறைவு விழா நடைபெற்றது.
ஆறுமுகனேரி விநாயகர் கோயில் தெருவில் சைவ சங்கம் சார்பில் மார்கழி மாதம் முழுவதும் பஜனை நடைபெற்றது. இதையடுத்து செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பஜனை நிறைவு விழாவுக்கு, சைவ வேளாளர் சங்கத் தலைவர் ஜெ.சங்கரலிலிங்கம் தலைமை வகித்தார். சுடலைமுத்துப்பிள்ளை, பொருளாளர் கற்பகவிநாயகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பஜனையில் கலந்துகொண்டவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், அரிமா சங்க முன்னாள் தலைவர் ஜெ.நடராஜன், விசு என்ற சுப்பிரமணியன், சுப்பிரமணியன், மணி என்ற சுப்பிரமணியன், கண்ணன் அய்யங்கார், முத்துராமன், மூர்த்தி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.