கோவில்பட்டியில் நகர திமுக செயல்வீரர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
நகர அவைத் தலைவர் இரா.கணேசன் தலைமை வகித்தார். நகரத் துணைச் செயலர்கள் அன்பழகன், காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்டப் பொறுப்பாளர் கீதாஜீவன், மாநில மகளிரணிச் செயலர் கனிமொழி எம்.பி. ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பேசியது: தமிழகத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல்கள் ஆட்சியை மாற்றக் கூடிய தேர்தல் என்பதை புரிந்துகொண்டு ஒவ்வொருவரும் செயல்பட வேண்டும். இந்த ஆட்சியை மாற்ற வேண்டுமென்றால், ஒவ்வொருவரும் நாம்தான் வேட்பாளர் என்ற உணர்வோடு பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.
கூட்டத்தில், திமுக நிர்வாகிகள் ஜெகன், ராதாகிருஷ்ணன், முத்து, ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நகரப் பொருளாளர் ராமமூர்த்தி வரவேற்றார். துணைச் செயலர் செல்வரத்தினம் ஜாஸ்லின் நன்றி கூறினார். ஏற்பாடுகளை நகரச் செயலர் கா.கருணாநிதி செய்திருந்தார்.