தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராக பங்கஜ் குமார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலராகப் பொறுப்பு வகித்த பி. ராம்நாத் முதுநிலை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவருக்கு பதிலாக புதிய தலைமைச் செயல் அலுவலராக பங்கஜ் குமார் நியமனம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஸ்டெர்லைட் காப்பர் நிர்வாக செயல்பாடுகளும், கூடுதலாக, மால்கோ எனர்ஜி லிமிடெட் மற்றும் ஃபுஜாய்ரா கோல்டு நிறுவன செயல்பாடுகளும் இவரது கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் என ஸ்டெர்லைட் காப்பர் நிறுவனம் தெரிவித்துள்ளது.