தேர்தல் நடத்தை விதிமுறைகள்படி கொடிக்கம்பத்தை அகற்றாத திமுக நிர்வாகியை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து, அரசியல் கட்சியினர் கொடிக்கம்பங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சம்பந்தப்பட்ட சுவர் விளம்பரங்களை நீக்க வேண்டும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள டீக்கடை அருகே திமுக கொடியுடன் உள்ள கொடிக்கம்பத்தை அகற்றாதது, கிழக்கு காவல் நிலைய போலீஸார் திருமேனி, தேவேந்திரகுமார் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்ட போது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸார் வழக்குப் பதிந்து, தேர்தல் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக திமுக மாணவரணி நகரச் செயலர் மயில்கர்ணனை கைது செய்தனர்.