பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்ய வலியுறுத்தி கோவில்பட்டியில் இந்து முன்னணியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி வடக்கு மாவட்டம் இந்து முன்னணி சார்பில், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, இந்து முன்னணி நகரத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார்.
ரமேஷ், முனீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாயக்கூத்தன் ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினார்.
இதில், இந்து முன்னணி நிர்வாகிகள், இந்து இளைஞர் அணி முன்னணியினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.