சாத்தான்குளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வாக்குப் பதிவு இயந்திரம் குறித்த செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் இரா. சாந்தகுமாரி தலைமை வகித்தார். வருவாய் ஆய்வாளர்கள் தங்கசாமி, இசக்கிதுரை, தனுஷ்கோடி ஆகியோர் கலந்துகொண்டு கல்லூரி மாணவிகளுக்கும், பேராசிரியைகளுக்கும் செயல் விளக்கம் அளித்தனர்.
வாக்குகள் விற்பனைக்கு அல்ல என்பது குறித்து அறிவுறுத்தப்பட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஏற்பாடுகளை கல்லூரி இளையோர் செஞ்சிலுவைச் சங்க திட்ட அலுவலர் சண்முகசுந்தரி செய்திருந்தார்.