மே 23ஆம் தேதியுடன் அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும்: டிடிவி தினகரன்

மே 23 ஆம் தேதியோடு அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.

மே 23 ஆம் தேதியோடு அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றார் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலர் டிடிவி தினகரன்.
ஓட்டப்பிடாரம் பேரவைத் தொகுதி அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர் ஆர். சுந்தரராஜை ஆதரித்து தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டபோது அவர் பேசியது: இந்த ஆட்சி மக்களால் அகற்றப்படக்கூடிய சூழல் உருவாகிவிட்டது. நான் திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளதாக முதல்வர் குற்றம்சாட்டி வருகிறார். திமுக வெற்றி பெறுவதற்கு நாங்கள் வேட்பாளரை நிறுத்தியிருந்தால் ஆர்கே. நகர் தொகுதியில் ஏன் திமுகவை வைப்புத் தொகை இழக்கச் செய்திருக்க வேண்டும்?.
ஓட்டப்பிடாரம் தொகுதியில் இரண்டாவது இடத்துக்கு யார் வரப்போகிறார்கள் என்பதற்காக அதிமுகவும், திமுகவும் போட்டிப் போட்டுக் கொண்டு இருக்கின்றன. கட்சியின் பெயரும், சின்னமும்தான் அதிமுகவில் உள்ளது. தொண்டர்கள் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் உள்ளனர். மே 23 ஆம் தேதியோடு அதிமுக ஆட்சி முடிவுக்கு வரும். ஏற்கெனவே 5 முறை ஆட்சியில் இருந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டியது இல்லை. 
நிரந்தரமாக ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு அமமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்றார் அவர்.
தொடர்ந்து, கோரம்பள்ளம், கேடிசி நகர், மாப்பிள்ளையூரணி, தருவைக்குளம் ஆகிய பகுதிகளில் டிடிவி தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com