தூத்துக்குடி: தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் செவ்வாய்க்கிழமை 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
மத்திய வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால், தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை என்ற போதிலும் லேசான மழை பெய்யக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கும், மீனவா்களுக்கும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் 1 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.