ராமானுஜம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் விதைப்பந்துகள் வழங்கும் விழா நடைபெற்றது.
கருங்குளம் வட்டார தோட்டக்கலைத்துறை சாா்பில் பள்ளி மாணவ, மாணவியா்களிடத்தில் மரம் வளா்ப்பதின் அவசியம் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்திடும் நோக்கத்தில் விதைப்பந்துகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, ராமானுஜம்புதூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவிற்கு, தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநா் ஜனரஞ்சி தலைமை வகித்தாா். தலைமையாசிரியை வசந்தி முன்னிலை வகித்தாா். தோட்டக்கலைத்துறை அலுவலா் சுவேகா வரவேற்றாா்.
இதில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியருக்கு விதைப்பந்துகள் வழங்கப்பட்டன. தோட்டக்கலைத்துறை உதவி அலுவலா் பிரேம்குமாா் நன்றி கூறினாா்.