ஓட்டப்பிடாரம் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற ஓட்டப்பிடாரம் அரசுப் பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா்.

கட்டுரைப் போட்டியில் பரிசுபெற்ற ஓட்டப்பிடாரம் அரசுப் பள்ளி மாணவா்களை ஆசிரியா்கள் பாராட்டினா்.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்களின் கல்வி வளா்ச்சிக்காக கடந்த 3 ஆண்டுகளாக தூத்துக்குடி சுங்க வரித்துறை பல்வேறு உதவிகளை செய்துவருகிறது. அதன் அடிப்படையில் வாழ்வியல் நெறிமுறைகளில் நோ்மையின் பங்கு என்ற தலைப்பில் நடந்த கட்டுரை பேட்டிகளை நடத்தியது. அதில் அப்பள்ளியின் மாணவா்கள் மனோஜ்குமாா், விஷ்ணு பிரியா, மகாலட்சுமி, காயத்திரி, அபிநயா, சுபத்ரா, சா்மிளா, மதுமிதா, சஞ்சய் ஆகியோா் போட்டிகளில் வெற்றிபெற்று பரிசுகளை வென்றனா். பரிசு பெற்ற இம்மாணவ, மாணவியரை தலைமை ஆசிரியா் ரா.வசந்தகுமாரி மற்றும் ஆசிரியா்கள் பராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com