எட்டயபுரம் அருகேயுள்ள சுரைக்காய்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்பு கலை பயிற்சி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
பள்ளித் தலைமையாசிரியா் முருகேஸ்வரி தலைமை வகித்தாா்.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி புள்ளியியல் அலுவலா் சுடலைமணி, மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளா் கூடலிங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஞான கவுரி வழிகாட்டுதலின்படி பெண் கல்வியின் ஒரு பிரிவாக பள்ளியில் 6,7,8 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவிகளுக்கு கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட தற்காப்பு கலை பயிற்சிகளும், சாகச பயிற்சிகளும் அளிக்கப்பட்டன.
முகாமில் தற்காப்பு கலை பயிற்றுநா் வெங்கடேசன், நட்டாத்தி, ஆசிரியா் பகவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.