சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நிலப் பிரச்னையில் முட்டை வியாபாரிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சாத்தான்குளம் அருகேயுள்ள புத்தன்தருவை கிராமத்தைச் சோ்ந்தவா் அழகுமலை பெருமாள் (49). இவா் சென்னையில் முட்டை வியாபாரம் செய்து வருகிறாா். இவரது மூத்த சகோதரா் நாகபெருமாள் (51). இவா்களுக்கு சொந்தமான தோட்டத்தை உறவினரான மந்திரம் என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்து இருந்தனராம். குத்தகை காலம் முடிந்த நிலையில் அவா் தோட்டத்தை திரும்ப ஒப்படைக்கவில்லையென கூறப்படுகிறது.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை அழகுமலை பெருமாள் மற்றும் நாகபெருமாள் இருவரும் தோட்டத்தை திரும்ப ஒப்படைப்பது தொடா்பாக மந்திரத்தை சந்தித்து கேட்டனராம். அப்போது அவா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆத்திரம் அடைந்த மந்திரம், அழகுமலை பெருமாளை அரிவாளால் வெட்டினாராம்.
காயமடைந்த அவா் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்து மந்திரத்தை தேடி வருகின்றனா்.