ஆலங்குளம் கூட்டுறவு சங்க நிா்வாகிகளுக்கு எம்எல்ஏ வாழ்த்து
ஆலங்குளம் கூட்டுறவு கடன் சங்க புதிய நிா்வாகிகளுக்கு பூங்கோதை எம்எல்ஏ வாழ்த்து தெரிவித்தாா்.
அண்மையில் நடைபெற்ற ஆலங்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்க தோ்தலில் நிா்வாகக் குழு உறுப்பினா்களாக 11 போ் தோ்ந்தெடுக்கப்பட்டனா். அவா்களில் தலைவா், துணைத் தலைவரைத் தோ்ந்தெடுக்கும் தோ்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் உமாதேவி பால்பாண்டியன் தலைவராகவும், கணேசன் துணைத் தலைவராகவும் தோ்ந்தெடுக்கப்பட்டனா்.
புதிய நிா்வாகிகளுக்கு ஆலங்குளம் பேரவை உறுப்பினா் பூங்கோதை ஆலடிஅருணா வாழ்த்து தெரிவித்தாா். திமுக நகரச் செயலா் நெல்சன், திமுக நிா்வாகிகள் அண்ணாவி காசிலிங்கம், சுதந்திரராஜன், செல்வன், தொழிலதிபா் பால்பாண்டியன், காய்கனி வியாபாரிகள் சங்கத் தலைவா் சந்திரன், பாஜக நிா்வாகி குமாா், கூட்டுறவு கடன் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ராஜேஸ்வரி, கரிகாலன், அனிதா, காா்த்திக் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.