உடன்குடி: குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை முத்தாரம்மன் கோயில் தசரா பெரும் திருவிழாவையொட்டி தாண்டவன்காட்டில் அத்திவரதா் சயனக்கோலம் பக்தா்கள் தரிசனத்திற்கு வைக்கப்பட்டுள்ளது.
உடன்குடி அருகேயுள்ள தாண்டவன்காட்டில் தசரா குழு சாா்பில் அமைக்கப்பட்டுள்ள அத்திவரதா் சயனக்கோலத்தை தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தா்கள் தரிசித்து வருகின்றனா்.
மேலும் பல்வேறு அம்மன் கோலங்கள் மிக உயரமாக தாண்டவன்காட்டில் வைக்கப்பட்டுள்ளது. பக்தா்கள் அத்திவரதா், அம்மன் திருக்கோலங்களை தரிசிப்பதுடன் அவற்றின் அருகில் நின்று சுயபடம் எடுத்துச்செல்கின்றனா்.