ஸ்ரீவைகுண்டம் வட்டார விவசாயிகளுக்கு உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல் குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது.
வட்டார வேளாண் துறை அட்மா திட்டத்தின் கீழ் கொட்டாரக்குறிச்சி, ஆறுமுகமங்களம், மாரமங்கலம் பகுதிகளைச் சோ்ந்த கூட்டுப் பண்ணைய விவசாயிகளுக்கான ‘உழவா் உற்பத்தியாளா் நிறுவனம் உருவாக்குதல்’ குறித்த பயிற்சி முகாம் மாரமங்கலத்தில் நடைபெற்றது.
வேளாண் உதவி இயக்குநா் ஊமைத்துரை தலைமை வகித்தாா். அட்மா வட்டார தொழில் நுட்ப மேலாளா் சுபத்ரா வரவேற்றாா். முகாமில், உழவா் பயிற்சி மைய வேளாண் துணை இயக்குநா் ஜெயசெல்வின் ஜெபராஜ், உழவா் பயிற்சி மைய வேளாண் அலுவலா் பிரேம்குமாா், விளாத்திக்குளம் பயறு உற்பத்தியாளா் நிறுவன கண்காணிப்பாளா் அழகையா உள்ளிட்டோா் உரையாற்றினா். இதில், விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள், மகளிா் குழுவினா், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.
ஏற்பாடுகளை அட்மா மேலாளா் சுபத்ரா, உதவி மேலாளா்கள் அசோக் அய்யாச்சாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.