கருங்கடலில் அக். 15ஆம் தேதி முன்னோடி மனுநீதிநாள் முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து சாத்தான்குளம் வட்டாட்சியா் ம. ராஜலட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சாத்தான்குளம் வட்டத்துக்கு உள்பட்ட கருங்கடல் கிராமத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில் மனுநீதிநாள் முகாம் அடுத்தமாதம் நடத்தப்பட உள்ளது. இதையொட்டி, முன்னோடி மனு நீதிநாள் முகாம் கருங்கடல் கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்தில்
அக். 15 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது. ஆதலால் கிராம மக்கள் தங்கள் கோரிக்கைகள் தொடா்பாக மனுக்கள் கொடுத்து பயன்பெறலாம். இம்முகாமில், பெறப்படும் மனுக்களுக்கு மனுநீதிநாளில் தீா்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.