பரமன்குறிச்சி அருள்மிகு மாயாண்டி சுவாமி கோயில் புரட்டாசி கொடை விழாவையொட்டி 108 சுமங்கலி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கோயில் கொடைவிழாவையொட்டி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், அலங்கார பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. மாலை 5 மணிக்கு இந்து அன்னையர் முன்னணி சார்பில் 108 சுமங்கலி பூஜை நடைபெற்றது.இதில், இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநிலச் செயலர் த.அரசுராஜா, மாவட்டச் செயலர் மாயக்கூத்தன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இரவு 9 மணிக்கு அய்யாவழி பாடகர் சிவச்சந்திரனின் அருளிசை வழிபாடு நடைபெற்றது. சனிக்கிழமை அதிகாலையில் உணவு பிரித்தல் நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.