திருச்செந்தூரில் சமையல் எரிவாயு உருளையில் வாக்காளர் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிசெய்யும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
திருச்செந்தூர் கீழரதவீதியில் இயங்கி வரும் சமையல் எரிவாயு முகவர் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கர்கள் எரிவாயு உருளையில் ஒட்டப்பட்டது. இதில், எரிவாயு நிறுவனத்தின் விற்பனை மேலாளர் லட்சுமி நாராயணன், விநியோகஸ்தர் சுப்புலட்சுமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.