வாழைப்பயிருக்கு தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் விவசாயிகள் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஸ்ரீவைகுண்டம் நீர்த்தேக்கத்திலிருந்து வடகால் பகுதியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கரில் வாழை பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில், பயிர்களுக்கு தேவையான தண்ணீரை அரசு அணையில் இருந்து திறந்து விடாத காரணத்தால் வாழைக்கன்றுகள் கருகி வருவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், வாழைப்பயிர்களை காப்பாற்றும் வகையில் மணிமுத்தாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்து விட வலியுறுத்தி, தூத்துக்குடி அருகேயுள்ள புதுக்கோட்டையில் விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.பி. ஆறுமுகம் மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.