கோவில்பட்டி பிரதான சாலையில் நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி பெரியசாமி நகரைச் சேர்ந்த மோகன் மகன் சீனிவாசன்(44). கோவில்பட்டியில் நிதி நிறுவனம் நடத்தி வரும் இவர், சனிக்கிழமை பிற்பகல் வழக்கம் போல் நிறுவன அலுவலகத்தை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டு, மாலையில் வந்தாராம். அப்போது அலுவலக பூட்டு உடைக்கப்பட்டு திறந்த நிலையில் கிடந்ததாம். உள்ளே சென்று பார்த்த போது அங்குள்ள மேஜை உடைக்கப்பட்டு அதில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருப்பது தெரியவந்ததாம். இதுகுறித்த புகாரின் பேரில், கிழக்கு காவல் நிலைய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து, பூட்டை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.