கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு சுயநிதி பாடப்பிரிவு கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் பயிலரங்கு நடைபெற்றது.
அரசுத் துறைகளில் வேலைவாய்ப்புகள்' என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரி முதல்வர் சு.கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி இயக்குநர் கு.வெங்கடாசலபதி முன்னிலை வகித்தார். மதுரை ஆயுள் காப்பீட்டுக் கழக அலுவலர் பாண்டியராஜன், தனியார் பயிற்சி நிறுவன பயிற்சியாளர் நாகராஜன் ஆகியோர் பயிற்சி அளித்தனர்.
வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் சாக்ரடீஸ் வரவேற்றார். துறை பேராசிரியர் கிருபாகரன் நன்றி கூறினார்.