மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் உடன்குடி நயினாப் பிள்ளைத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2018-19 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சு.ரம்யா,சே.முகம்மது அப்சல்,சே.முகம்மது கஸ்ஸாலி ஜூபைர் ஆகியோரை உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர் நம்பித்துரை, பள்ளித் தலைமையாசிரியை சு.தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இம்மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாதம் தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.