திருச்செந்தூர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதை முன்னிட்டு காலையில் பால்குட ஊர்வலம் நடைபெற்றது. தொடர்ந்து ஜெயவிநாயகர் மற்றும் சந்தனமாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மஞ்சள் நீராட்டு நடைபெற்றது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு முளைப்பாரி ஊர்வலத்தை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடைபெற்றது. ஏற்பாடுகளை விழாக் குழுவினர் செய்திருந்தனர்.